கோவை கலெக்டரிடம் கவுன்சிலர் மனு

 

கோவை, மார்ச் 16: கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு விளாங்குறிச்சி கிராமம் புல எண். 472/1 480/1பி 480/1ஏ ஆகிய பகுதிகள் பத்திரப்பதிவு நில மதிப்பில் 0 (பூஜ்யம்) என காட்டுகிறது. இது, 705/96 என்ற எண் கொண்ட டி.டி.சி.பி லே-அவுட் ஆகும். இது, பாலகுரு கார்டன் என்ற பெயரில் இங்கு அமைந்துள்ளள்ளது.

இங்குள்ள அனைத்து மனைகளிலும் வீடுகள் உள்ளன. இந்த மனைப்பிரிவுகள் நத்தம் பூமி அல்ல. அப்படியிருக்கும்போது ஏன் இவ்வாறு 0 (பூஜ்யம்) மதிப்பு காட்டுகிறது என தெரியவில்லை. இதை, மறுஆய்வு செய்து, பாலகுரு கார்டன் பகுதி மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், உரிய மதிப்பீட்டை பத்திரப்பதிவு துறை கணினியில் பதிவேற்றம் செய்து தருமாறு வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post கோவை கலெக்டரிடம் கவுன்சிலர் மனு appeared first on Dinakaran.

Related Stories: