மல்லிகைநத்தம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் வருடாபிஷேகம்

 

கந்தர்வகோட்டை, மார்ச்14: மல்லிகைநத்தம் கிராமத்தில் விநாயகர் ஆலய வருடாபிஷேகம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சி மல்லிகை நத்தம் கிராமத்தில் பிள்ளையார் ஊரணி குளகரையில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள விநாயகருக்கு இருபுறமும் ராகு-கேது உள்ளது சிறப்பாகும் .இந்த ஆலயம் ராகு- கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது . மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், திருமண தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 11 வாரம் நல்லெண்ணெய் ஊற்றி மண் விளக்கில் தீபம் ஏற்றினால் தோஷ நிவர்த்தி பெறுவதாக கூறுகிறார்கள். இந்நிலையில் இக்கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

The post மல்லிகைநத்தம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் வருடாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: