திருச்சியில் ஊஞ்சல் விளையாடிய சிறுவன் கழுத்தில் துண்டு இறுக்கி பலி

 

திருச்சி, மார்ச் 14: திருச்சியில் பள்ளி சிறுவன் துண்டால் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்தில் இறுக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தான் இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் அதியரூபன்(11). மொராய்ஸ் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துண்டால் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக துண்டு கழுத்தில் இறுக்கி அதியரூபன் இறந்தார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சியில் ஊஞ்சல் விளையாடிய சிறுவன் கழுத்தில் துண்டு இறுக்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: