இதைத் தொடர்ந்து, 538 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி, 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்திருந்தது.அதர்வா டெய்டே 3, துருவ் ஷோரி 7 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தனர். அதர்வா 32, துருவ் 28 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, விதர்பா 64/2 என திடீர் சரிவை சந்தித்தது. அடுத்து அமான் மொகாடே – கருண் நாயர் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அமான் 32, யாஷ் ராத்தோட் 7 எடுத்து வெளியேற, விதர்பா 133 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.
இந்த நிலையில், கருண் நாயர் – கேப்டன் அக்ஷய் வாத்கர் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது. இருவரும் 5வது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தனர். கருண் நாயர் 74 ரன் (220 பந்து, 3 பவுண்டரி) விளாசி முஷீர் கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தமோர் வசம் பிடிபட, விதர்பா மீண்டும் பின்னடைவை சந்தித்தது. 4ம் நாள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்துள்ளது. அக்ஷய் வாத்கர் 56 ரன், ஹர்ஷ் துபே 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர். மும்பை பந்துவீச்சில் தனுஷ் கோடியன், முஷீர் கான் தலா 2, ஷாம்ஸ் முலானி 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 5 விக்கெட் இருக்க, விதர்பா வெற்றிக்கு இன்னும் 290 ரன் தேவை என்ற நிலையில், இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
The post கருண் நாயர் 74, அக்ஷய் வாத்கர் 56* விதர்பா 5 விக்கெட்டுக்கு 248: கடைசி நாளில் வெற்றி யாருக்கு? appeared first on Dinakaran.