மேலும் அந்த டிரஸ்ட் பெயரில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பட்டாசு பண்டு போன்றவற்றை நடத்தி வந்தனர். இந்த சீட்டில் சேர்ந்தால் நல்ல பலன் இருக்கும் என்று நம்பிக்கையும், ஆசை வார்த்தையும் கூறினர். அவர் நடத்திவரும் சீட்டில் சேர்ந்து கடந்த 2021 ஜனவரி முதல் 2022 நவம்பர் வரை ரூ.2 லட்சம் என 2 சீட்டிற்கு மொத்தம் ரூ.4 லட்சம் ஏலச்சீட்டு கட்டினேன். அந்த தொகையை தராமல் உமயபார்வதி ஏமாற்றி உள்ளார். இதேபோல் சுமார் 16 நபர்களிடம் ஏலச்சீட்டு நடத்துவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.18.10 லட்சம் ரொக்கப் பணமாகவும், சிலரிடம் தீபாவளி பண்ட் என்ற பெயரில் ரூ.39.39 லட்சத்தையும் ஏமாற்றியுள்ளார் என்று புகாரில் கூறியுள்ளார். இதனையடுத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு செல்வகுமார் மற்றும் முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவாக இருந்த உமயபார்வதியை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது appeared first on Dinakaran.