கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சங்கரா தகவல் தொழில் நுட்ப சங்கம் சார்பில், கணினி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறையின், ‘கணினி அறிவியலில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்லூரி வளாகத்திலுள்ள நடந்தது. இதில், கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

கணினி அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் ஹரிஹரன் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும், சென்னை டிஜி வைஷ்ணவா கல்லூரி உதவி பேராசிரியர் வேல்முருகன் தேசிய கருத்தரங்கினை துவக்கி வைத்தார். இறுதியாக சங்கரா தகவல் தொழில்நுட்ப சங்க துணை தலைவர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

The post கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: