இவர் கொடுத்த தகவலின்பேரில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் (40), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தமுருகன் (37), சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் (40), மென்ஷன் உரிமையாளர் மதுரையை சேர்ந்த கனி (26), மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணி புரியும் திருச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (39) ஆகியோரை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தார்கள், எங்கெல்லாம் விற்பனை செய்கிறார்கள், கஞ்சா விற்பனையில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தங்கசாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தங்கசாலை வால்டாக்ஸ் சாலை பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது: 12 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.