விழாவில் பங்குத்தந்தை பாஸ்கல் ராஜ், தாளாளர் கிளாரா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நிர்மலா மேரி வரவேற்றார். விழாவில் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி கடலூர் மாவட்டத்தின் நூற்றாண்டை கடந்த முதன்மையான பெண்கள் பள்ளியின் சிறப்புகள் குறித்து புகழாரம் சூட்டி பேசினார்.
வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன், வட்டார மேற்பார்வையாளர் ஜெயலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் இளையராஜா, மாமன்ற கவுன்சிலர் பாலசுந்தர், கவிதா ரகுராமன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கடலூரில் நூற்றாண்டை கடந்த பள்ளி ஆண்டு விழா; பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி பங்கேற்பு! appeared first on Dinakaran.