சேத்துப்பட்டு சலவைக் கூடத்தை மறுவளர்ச்சி செய்யும் வகையில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் இன்று (08.03.2024) மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐ.பரந்தாமன் அவர்கள் முன்னிலையில் சென்னை, சேத்துப்பட்டில் அமைந்துள்ள சலவைக் கூடத்தை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூபாய் 24.05 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி செய்யும் வகையில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டு, பணி தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில், சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவில் உள்ள சேத்துப்பட்டு சலவைக் கூடத்தை, ரூ.24.05 கோடி மதிப்பீட்டில், 150 சலவைக்கற்கள், 162 சேமிப்பு அறைகள், நீரேற்று அறை, நீர்தேக்கத் தொட்டி, ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்தனி கழிப்பறைகள், வாகன நிறுத்தும் வசதி ஆகியவற்றுடன் மொத்தம் 9,550 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுமானத்துடன் மறுவளர்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.ரவிச்சந்திரன், சி.எம்.டி.ஏ. தலைமை திட்ட அமைப்பாளர் திரு.ருத்ரமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் திரு.பா.ராஜ மகேஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதி திரு.வி.சுதாகர், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் திரு.பருதி இளம்சுருதி, திருமதி.இராஜேஷ்வரி ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post சேத்துப்பட்டு சலவைக் கூடத்தை மறுவளர்ச்சி செய்யும் வகையில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Related Stories: