அமைச்சர் பதவி கொடுத்து திரிபுரா கட்சியை வளைத்தது பா.ஜ

அகர்தலா: திரிபுராவில் பிரதான எதிர்கட்சியான திப்ரா மோதா சார்பில் பழங்குடியின மக்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கோரி தொடர் உண்ணாரவிரதப்போராட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து திப்ரா மோதா, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையே சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனையடுத்து பாஜ தலைமையிலான அரசில் எதிர்கட்சியாக செயல்பட்டு வந்த திப்ரா மோதா இணைந்துள்ளது. திப்ரா மோதாவிடம் 13 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திப்ரா மோதா மூத்த தலைவர் அனிமேஷ் தேபர்மா மற்றும் கட்சியின் எம்எல்ஏ பிரிஷாகேது தேபர்மா ஆகியோர் நேற்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். முன்னதாக சட்டப்பேரவையின் எதிர்கட்சி தலைவர் பதவியை அனிமேஷ் ராஜினாமா செய்தார்.

 

The post அமைச்சர் பதவி கொடுத்து திரிபுரா கட்சியை வளைத்தது பா.ஜ appeared first on Dinakaran.

Related Stories: