மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் பாஜ மட்டும் 30 இடங்களுக்கு மேல் போட்டியிட விரும்புவதால் அஜித் பவார், ஷிண்டே அணிகள் விட்டுக்கொடுக்க மறுப்பதாலும் பிரச்னை உருவானதாக தெரிகிறது. நேற்று அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் எந்தவித முடிவும் ஏற்படவில்லை. இதனால் அமித்ஷா அதிருப்தியுடன் டெல்லி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஜூஜனதா தளத்துடன் பா.ஜ கூட்டணியா?
ஒடிசா மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒடிசா பாஜ தலைவர்கள் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மற்றும் பா.ஜ கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளும், 147 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. 2019ல் பிஜூ ஜனதா தளம் 12 எம்பி தொகுதி 112 சட்டப்பேரவை தொகுதிகளில் ெவன்றது. பாஜ 8 எம்பி தொகுதிகளையும், 23 சட்டமன்றத் தொகுதிகளையும் வென்றது
The post மகாராஷ்டிராவில் இழுபறி; ஷிண்டே, அஜித்பவாரிடம் அமித்ஷா பஞ்சாயத்து appeared first on Dinakaran.