இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நேற்று கூறியதாவது:
பேமண்ட் வங்கிக்கான கெடு மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. பேடிஎம் பேமண்ட் ஆப்ஸ் தொடர்ந்து செயல்படலாமா கூடாதா என்பது குறித்து தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் முடிவெடுக்கும். அந்த முடிவு எதுவாக இருந்தாலும் ரிசர்வ் வங்கி குறுக்கிடாது. அதேநேரத்தில், ரிசர்வ் வங்கி தடையால் பே-டிஎம் வாலட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 80 முதல் 85 சதவீதம் பேர் பாதிக்கப்பட மாட்டார்கள். மற்றவர்கள் தாங்கள் வைத்துள்ள பே-டிஎம் யுபிஐ ஆப்சை பிற வங்கிகளுடன் இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post தடை விதிக்கப்பட்டதால் பே-டிஎம் வாலட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?.. ரிசர்வ் வங்கி விளக்கம் appeared first on Dinakaran.