ஐஓடி எனப்படும் இண்டர்நெட் ஆப் திங்க்ஸ் தொழில்நுட்பம் தொழில்துறையில் குறிப்பாக மின்சாரத்துறையில் பெருமளவு பயன்படுகிறது. இதனால் மின்சாரம் சேமிக்கப்பட்டு செலவினங்கள் குறைகின்றன. தொழில்நிறுவனங்களில் மட்டுமின்றி சாதாரணமாக வீடுகளில்கூட ஐஓடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலன்பெறலாம். அதேபோல், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்றைய தினம் ஒட்டுமொத்தமாக அனைத்து தொழில்நுட்பங்களையும் அடியோடு மாற்றிபோட்டுவிட்டது. ஏஐ தொழில்நுட்பத்தை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. மனிதர்கள் அளிக்கும் தரவுகளுக்கு ஏற்பவே ஏஐ தொழில்நுட்பம் இயங்குகிறது. மனிதர்களும் ஏஐ தொழில்நுட்பமும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.
The post ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து appeared first on Dinakaran.