பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக 5 நாட்களில் 35 பேர் பலி..!!

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. வடமேற்கு கைபர், கராச்சி மாகாணத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தரையில் 7அடி வரை உறைபனி தேங்கியுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் மின்சாரம், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனிடையே பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் காரணமாக கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மகாண தேசிய பேரிடர் ஆணையம் அறிவித்துள்ளது.

The post பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக 5 நாட்களில் 35 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: