திமுக எம்.பி. ஆ.ராசா குறித்து இழிவாக பேசிய விவகாரம் பாஜ பிரமுகர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக எம்.பி ஆ.ராசா குறித்து இழிவாக பேசியதாக பாஜக கோவை மாவட்ட முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா, இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கடந்த 2022ம் செப்டம்பர் மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக கோவை மாவட்ட முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆ.ராசா மற்றும் பெரியார் ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக திமுக நிர்வாகி அனந்த குமார் என்பவர் புகார் அளித்தார்.

இதனடிப்படையில், பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் பாலாஜி உத்தமராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாலாஜி உத்தமராமசாமி பேசியது ஏற்க கூடியதல்ல. ஆனால், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு தொடர்ந்திருக்க கூடாது என்று கூறி பாலாஜி உத்தமராமசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

The post திமுக எம்.பி. ஆ.ராசா குறித்து இழிவாக பேசிய விவகாரம் பாஜ பிரமுகர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: