கம்பத்தில் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற புதிய திமுக நிர்வாகிகள்

 

கூடலூர், மார்ச் 5: தேனி தெற்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர்கள் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தேனி தெற்கு மாவட்ட துணைசெயலாளர், செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினருக்கான புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில் மாவட்ட துணைசெயலாளராக செந்தில்குமார், செயற்குழு உறுப்பினராக குருகுமரன், பொதுக்குழு உறுப்பினராக அக்கீம் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் நேற்று தேனி தெற்கு மாவட்டசெயலாளர் கம்பம் இராமகிருஷ்ணன் எம்எல்ஏவை அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியின்போது கம்பம் நகரசெயலாளர்கள் வீரபாண்டியன் (வ), பால்பாண்டி ராஜா (தெ) மற்றும் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், துணைச்செயலாளர்கள், நகர அவைத் தலைவர்கள், நகரநிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், அணிபொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள், மாநில தீர்மானக்குழு இணைசெயலாளர் ஜெயக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

The post கம்பத்தில் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற புதிய திமுக நிர்வாகிகள் appeared first on Dinakaran.

Related Stories: