இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,940க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,520க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும்.
நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும். சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.1 கிராம்) ஒரே நாளில் 36.9 டாலர் உயர்ந்து 2091 டாலரானது. இதன் எதிரொலியாக உள்ளூர் சந்தையிலும் விலை அபரிமிதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் இறுதிக்கு பிறகு சர்வதேச சந்தையில் தங்கம் விலை தற்போது மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு டிராய் அவுன்ஸ் 2095 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
The post தங்கம் விலை 3 நாளில் சவரன் ரூ.1040 எகிறியது appeared first on Dinakaran.