முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ அறிக்கை

சங்கரன்கோவில், மார்ச் 1: தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றவர்கள், சிறப்பு குழந்தைகள் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அனைத்து இடங்களிலும் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்க வேண்டும். திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இல்லம் தேடி ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளன்று மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: