இந்நிலையில் ஏஎஸ்பியை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதிக்க கோரியும் போலீஸ் கமாண்டோக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் கமாண்டோக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post மணிப்பூரில் ஏஎஸ்பி கடத்தல் ஆயுத படையினர் போராட்டம் appeared first on Dinakaran.