இந்நிலையில்,ஜான்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 132 ஏழை பெண்களுக்கு திருமணம் நடந்தது. இதில,குஷி என்ற பெண்ணுக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மணமகனுடன் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாப்பிள்ளை அங்கு வராததால் பெண்ணின் மைத்துனருடன் திருமண சடங்குகள் செய்துள்ளனர். அரசின் நிதியுதவியை பெறுவதற்காக இவ்வாறு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் தவறு நடந்திருப்பது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி லலிதா யாதவ் தெரிவித்தார்.
The post உபியில் திருமண நிதியுதவி திட்டத்தில் மீண்டும் மோசடி; மாப்பிள்ளை வராததால் மைத்துனருடன் திருமண சடங்குகள் செய்த பெண் appeared first on Dinakaran.