அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மயிலாடுதுறையில் புதிய ரேஷன்கடை கட்டிடம் திறப்பு

மயிலாடுதுறை,பிப்.27: மயிலாடுதுறை நகராட்சி 26வது வார்டு கூறைநாடு பகுதிகளில் ரேஷன்கடை நிரந்தர கட்டிடம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் தனியார் வாடகை கட்டடத்தில் பல ஆண்டுகளாக ரேஷன்கடை இயங்கி வந்தது. புதிய கட்டடம் கட்டிகொடுக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையடுத்து வண்டிப்பேட்டை பகுதியில் நகராட்சி இடத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹18 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

துணை தலைவர் சிவக்குமார், ஆணையர் சங்கர், பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ ராஜகுமார் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். வார்டு கவுன்சிலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

The post அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மயிலாடுதுறையில் புதிய ரேஷன்கடை கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: