இதை சற்றும் எதிர்பார்க்காத விஜயலட்சுமி உதவி கேட்டு அலறினார். அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற காவலர் ராஜதுரையை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் காவலர் ராஜதுரை படுகாயமடைந்தார். இதுகுறித்து வருவாய் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன் புகாரின்படி சூளைமேடு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து காவலர் ராஜதுரையை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது ஆவடி பட்டாலியனில் பணியாற்றி வரும் ராஜதுரைக்கு அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து 6 சவரன் செயின் மீட்கப்பட்டது.
பொதுமக்கள் தாக்கியதில் உடல் முழுவதும் காயம் இருந்ததால், காவலர் ராஜதுரைக்கு அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்த பின், போலீசார் கைது செய்தனர். ராஜதுரை இதுபோல் வேறு யாரிடமும் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளாரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ ரயிலில் வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அரும்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகாரி மனைவியிடம் செயின் பறித்த காவலர்: பொதுமக்கள் சுற்றிவளைத்தனர் appeared first on Dinakaran.