நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் லூர்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் திருமால், மால்சுந்தர், ஜார்ஜ் விக்டர், கனகராஜ், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட நிர்வாகிகள் ஏசுதாஸ், எலிசா, கணேசன், ஜெயந்தி, யுத்தீஸ்வரன், ஆபிரகாம் ஆகியோர் வரவேற்றனர். இந்த விழிப்புணர் கூட்டத்தில் வழக்கறிஞர் எஸ்.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு நுகர்வோர் சட்டங்கள் மற்றும் வழக்குகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளித்து பேசினார். இதில் சுப்பிரமணி, விஜயநாதன், அல்போன்ஸ், ஸ்டீபன், செக்கானா, மோகன், மனோஜ், தேவகுமார், சசிகலா, ஆபிரகாம் லிங்கன், சரிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் ஏ.எலிசா நன்றி கூறினார்.

The post நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: