அதன் திறப்பு விழா வளையங்கரணை ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தொழிற்சாலை பொது மேலாளர் ஜெகதீஷ், தனியார் தொண்டு நிறுவனத்தின் தலைவர் செந்தூர்பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் கீர்த்தி பிரகாஷ் கலந்துகொண்டு, புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும், ரூ.24 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட வளையங்கரணை புது தாங்கல் ஏரியை பார்வையிட்டனர். பின்னர், ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.16 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.