சிவாங்கா ரத யாத்திரை அரூர் வந்தது

அரூர்,பிப்.23: சிவாங்கா என்னும் ரத யாத்திரை, சென்னையிலிருந்து வெள்ளியங்கிரி மலை வரை 560 கி.மீ., தொலைவிற்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சென்னையைச் சேர்ந்த 25 பேர் அடங்கிய குழுவினர், சிவாங்கா என்னும் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 7ம் தேதி சென்னையிலிருந்து பயணத்தை துவக்கினர். வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், அரூர் வழியாக வெள்ளியங்கிரி மலைக்கு கால்நடையாகவே சென்று, விரதத்தை முடிக்கின்றனர். அரூர் வந்த குழுவினருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.இதுகுறித்து குழுவினர் கூறுகையில், பௌர்ணமி தொடங்கி 42 நாட்கள் விரதமிருந்து ரதத்துடன் கால்நடையாகவே சென்னையிலிருந்து வெள்ளியங்கிரி மலையை அடைவதே இந்த புனித பயணத்தின் நோக்கமாகும். கடந்த 12 வருடங்களாக இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

The post சிவாங்கா ரத யாத்திரை அரூர் வந்தது appeared first on Dinakaran.

Related Stories: