அப்படிப் புதுப்பிக்கப்பட்டிரும் அண்ணா நினைவிடமும், கலைஞரின் புதிய நினைவிடமும் வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன. எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம், முடிவெடுத்திருக்கிறோம். எனவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
The post மெரினாவில் கலைஞர் நினைவிடம் வரும் 26ம் தேதி திறக்கப்படும்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.