போலீஸ்காரர் வெட்டி கொலை சட்டீஸ்கரில் நக்சல்கள் அராஜகம்

பிஜாப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் ஆயுதப்படை காவலர் ஒருவர் நக்சலைட்டுகளால் வெட்டி கொல்லப்பட்டார். சட்டீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டம் குத்ரு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமத்தில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை அங்கு வந்த நக்சல் குழுவினர் ஆயுதப்படை காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ் கமாண்டர் திஜவ் ராம் புர்யாவை அரிவாளால் வெட்டி கொன்றனர். இதையடுத்து அங்கு கூடுதல் ஆயுதப்படை காவலர்கள் குவிக்கப்பட்டு, தப்பியோடிய நக்சல் கும்பலை தேடி வருகின்றனர்.

The post போலீஸ்காரர் வெட்டி கொலை சட்டீஸ்கரில் நக்சல்கள் அராஜகம் appeared first on Dinakaran.

Related Stories: