கர்நாடகாவில் பிறந்த வித்யாசாகர் மகராஜ், சிறு வயதிலிருந்தே ஆன்மிக வாழ்க்கையை தழுவினார். அவரது 21 வயதில், ராஜஸ்தானின் அஜ்மீரில் ஆன்மீக தீட்சை எடுத்தார். தனது குருவான ஆச்சார்யா ஞானசாகரின் மறைவுக்கு பின்னர் தனது 26 வயதில் ஆச்சார்யாவானார். சமண நூல்கள் மற்றும் தத்துவங்களின் ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். பிராகிருதம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நிபுணராக இருந்தார்.
அவரது எழுத்துக்கள் இன்றும் ஆராய்ச்சியாளர்களால் விலைமதிப்பற்றதாக கருதப்படுகின்றன. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர். தற்போது அவரது மறைவு, ஜெயின் சமய மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post 3 நாட்களாக சமாதி நிலையில் இருந்த ஜெயின் சமய குரு மறைவு appeared first on Dinakaran.