போரூர் கோட்டத்திற்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: 20ம் தேதி நடக்கிறது

சென்னை: போரூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார்ந்த குறைகளை பொதுமக்கள் தெரிவிக்க வரும் 20ம் தேதி குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: போரூர் செட்டியார் அகரம் ரோட்டில் உள்ள எஸ்.ஆர்.எம்.சி துணை மின்நிலைய வளாகத்தில் வரும் 20ம் தேதி காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் மின்சார்ந்த பிரச்னை மற்றும் குறைகளை தெரிவித்து விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post போரூர் கோட்டத்திற்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: 20ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: