பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், “தமிழகம் முழுவதும் இதேபோன்று மொத்தம் 1515 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 174 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 26 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் 9563 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளோம். தமிழகத்தில் உள்ள உள்ள 234 தொகுதிகளிலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக. தற்போது வரை 98 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் மூலம் 483 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 40,790 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார். நிகழ்ச்சியில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், அரசு அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post தனியார் வேலைவாய்ப்பு முகாம் 409 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.