இல்லை என்றால், கருப்பு பணத்தை சேர்த்து அரசியல் கட்சிகளுக்கு கொடுத்து விடுவார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, எங்கள் தலைவர் வரவேற்றுள்ளார். இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களை நிறைவேற்றியுள்ள அரசு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசு. எந்த விதமான திட்டங்களும் இல்லை என்று, கண்ணை மூடிக்கொண்டு பேசுகின்றவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. காதை பொத்திக் கொண்டு இருக்கிறவர்களுக்கும், நாங்கள் பதில் சொல்ல முடியாது. கண்ணையும், காதையும் திறந்து கேட்டால் தெரியும், பார்த்தால் புரியும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
The post கண்ணை மூடியும் காதை பொத்தியும் இருப்பவங்களுக்கு பதில் சொல்ல முடியாது: அமைச்சர் ரகுபதி சரவெடி appeared first on Dinakaran.