அப்போது புத்தளம் அருகில் சின்னப்பாடு கடல் பகுதியில் சென்ற இரண்டு படகுகளை பிடித்து சோதனை செய்தனர். அந்த படகின் அடிப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41 மூடைகளை கைப்பற்றி சோதனை செய்த போது சுமார் 1,177 கிலோ எடையில் பீடி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கெண்டு இலைகள் இருந்தது. மேலும் 150 பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பீடி இலைகள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு படகையும் கைப்பற்றினர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் இலங்கை மதிப்பு ரூ.22 லட்சமாகும். மேலும் படகில் இருந்த புத்தளம் கல்பிட்டி பகுதியை சேர்ந்த 20 முதல் 42 வயதுடைய நான்கு இலங்கையர்களை கைது செய்து கடற்படையினர் விசாரணை செய்தனர். இதில், தமிழகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில் பீடி இலைகள், பூச்சிக்கொல்லி மருந்துகளை இலங்கை புத்தளம் பகுதிக்கு கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களும் கடத்தல் நபர்களும் மேல் நடவடிக்கைக்காக இலங்கை கட்டுநாயக்க சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
The post மன்னார் வளைகுடா கடல் வழியாக கடத்தப்பட்ட ₹22 லட்சம் பீடி இலைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல் appeared first on Dinakaran.