பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. பஸ்தர் மாவட்டத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி டி.ஆர்.தேவாங்கன் தீர்ப்பளித்தார். இந்திய தண்டனையியல் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், வெடிபொருள்கள் சட்டம், ஆயுதங்கள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின்கீழ் மகாதேவ் நாக், கவாசி ஜோகா, மணி ராம் மண்டியா, தயாராம் பகேல் ஆகிய 4 நக்சல் தீவிரவாதிகள் மீதான குற்றங்களை உறுதி செய்த நீதிபதி, நால்வருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்தார்.
The post தாக்குதலில் 15 போலீசார் பலியான வழக்கு: 4 நக்சல்களுக்கு ஆயுள் தண்டனை; சட்டீஸ்கர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.