இந்த நிலையில் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் பின்வருமாறு…
*எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்
*நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
*வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்
*லக்கிம்பூரில் கார் ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
*விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்
*வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடியபோது உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்
The post ரூ.10,000 ஓய்வூதியம், கடன் தள்ளுபடி, நினைவு மண்டபம் : டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன? appeared first on Dinakaran.