நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகப்பட்டினம்,பிப்.13: நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (14ம் தேதி) நடைபெறும் என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிப்ரவரி-மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (14ம் தேதி) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: