கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாயக்கர்குப்பம் கடற்கரையில் நேற்று மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த மீனவர்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். கூம்புவடிவிலான மர்மப்பொருளில் ஆபத்து தொடாதே, போலீசாருக்கு அறிவிக்கவும் என்றும் கிரீன்ஸ்டார் சிக்னல் டிவைஸ் என்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. இந்த மர்மபொருள் ஒன்றரை அடி நீளம் இருந்தது. இதையடுத்து மர்மப்பொருளை கைப்பற்றிய போலீசார், கப்பலுக்கு பயன்படுத்தப்படும் தளவாட பொருளா அல்லது வெடி பொருளா என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள் appeared first on Dinakaran.

Related Stories: