திருப்போரூர் அருகே பைக்குகள் மீது வேன் மோதி 7 பேர் காயம்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே பைக்குகள் மீது தனியார் தொழிற்சாலைக்கு செல்லும் வேன் மோதி 7 பேர் காயமடைந்தனர். கூடுவாஞ்சேரி அருகே உள்ள கன்னிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு நேற்று திருப்போரூரை அடுத்த மானாம்பதியில் இருந்து செம்பாக்கம், அச்சரப்பாக்கம் பகுதிகளில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, கொட்டமேடு அருகே வந்தபோது தாறுமாறாக ஒடிய வேன் நிலைதடுமாறி எதிரே வந்த இரு பைக்குகள் மீது மோதி, வனப்பகுதியில் உள்ள மரத்தில் மோதி நின்றது.

இதில், வேனை ஓட்டி வந்த சதீஷ் என்கிற சத்தியசீலன், (35), பைக்கை ஓட்டி வந்த சிகாமணி (45), அவரது மகன் சஞ்சய் (17), இன்னொரு பைக்கில் வந்த நவநீதன் (38), வேனில் பயணம் செய்த ஷர்மிளா (26), சுந்தரி (26), ரொசாரியோ (29) உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு, போரூர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்போரூர் அருகே பைக்குகள் மீது வேன் மோதி 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: