பின்னர் அவர் சத்தம் போட்டதும் ஊர் மக்கள் அங்கு திரண்டு வேடிக்கை பார்த்தனர். உடனடியாக அப்துல்ரஷீத் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு சென்ற வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் முதலையை பத்திரமாக மீட்டனர்.
அந்த முதலை 8 அடி நீளமும், 110 கிலோ எடையும் இருந்தது. பின்னர் வனத்துறையினர் வக்கரமாரி ஏரியில் முதலையை பாதுகாப்பாக எடுத்து சென்று விட்டனர். அதிகாலையில் வீட்டுக்குள் முதலை புகுந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சிதம்பரம் அருகே இன்று அதிகாலை வீட்டில் புகுந்த 8 அடி நீள முதலையால் பரபரப்பு: வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர் appeared first on Dinakaran.