ஆளுநர் ரவியை திரும்பப்பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் தளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உரைக்கு முதலில் ஒப்புதல் தந்த பிறகு சட்டப்பேரவையில் வாசிக்க மாட்டேன் என்று ஆளுநர் நாடகம் ஆடியுள்ளார் என்று அவர் கூறினார்.
ஆளுநர் ரவி நடவடிக்கை: ஜவாஹிருல்லா கண்டனம்
சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியின் கண்ணியத்தை சிறுமைப்படுத்தி நடந்துகொண்டுள்ளார். மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை, ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
The post மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை, ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்: ஜவாஹிருல்லா, தளி ராமச்சந்திரன் கண்டனம்!! appeared first on Dinakaran.