இந்த விவகாரத்தில், “1911ம் ஆண்டு வாரணாசியில் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டதா? மின் கட்டணம் எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது? அப்போது ஒரு யூனிட்டுக்கான மின் கட்டணம் எவ்வளவு? எந்த நிறுவனம் மின்சாரம் வழங்கியது? உத்தரபிரதேச மின்வாரியம் அப்போது இருந்ததா?” என அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தனர். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் இந்த கேள்விகளுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் மின்வாரியம் பதிலளிக்கவில்லை. மின்வாரிய அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கண்காணிப்பு பொறியாளர் அனில் வர்மா, நிர்வாக பொறியாளர் ஆர்.கே.கவுதம், துணைப்பிரிவு அதிகாரி சர்வேஷ் யாதவ் மற்றும் துணைப்பிரிவு அதிகாரி ரவி ஆனந்த் ஆகியோரை கைது செய்து வரும் 20ம் தேதி ஆணையத்தின் முன் ஆஜர்படுத்துமாறு வாரணாசி காவல்துறையினருக்கு தகவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post 1911 ஜன.1 மின் இணைப்பு வழங்கப்பட்டதாக ரசீது ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்காத உ.பி. அதிகாரிகளுக்கு கைது வாரண்ட்: மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.