குருவாயூர் கோவிலில் வளர்ப்பு யானை பத்மநாபன் நினைவு நாள் நாளை அனுசரிப்பு

பாலக்காடு: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவில் தேவஸ்தான வளர்ப்பு யானைகளில் ஒன்றான பத்மநாபன் நினைவுநாள் நாளை (12 ம்தேதி) அனுசரிக்கப்படுகிறது. குருவாயூர் தேவஸ்தானத்தின் வளர்ப்பு யானைகளில் முக்கிய தலைமையிடத்தில் பங்கு வகித்தது குருவாயூர் பத்மநாபன். கஜரத்னம் குருவாயூர் பத்மநாபனின் 4வது ஆண்டு நினைவுநாள் நாளை காலை 9 மணிக்கு குருவாயூர் தேவஸ்தான விருந்தினர் மாளிகை முன்பாக அமைக்கப்பட்டுள்ள குருவாயூர் பத்மநாபன் உருவச்சிலை முன் அனுசரிக்கப்படுகிறது.

குருவாயூர் பத்மநாபன் உருவச்சிலைக்கு முன் தேவஸ்தான சேர்மன் டாக்டர். வி.கே.விஜயன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,தேவஸ்தான ஊழியர்கள், யானை பாகர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் மலர்அஞ்சலி செலுத்தவுள்ளனர். மேலும், கஜரத்னம் குருவாயூர் பத்மநாபனின் உருவச்சிலைக்கு முன் தேவஸ்தானத்தின் 5 வளர்ப்பு யானைகள் மலர்தூவி நினைவஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 12 ம்தேதி அன்று குருவாயூர் பத்மநாபன் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post குருவாயூர் கோவிலில் வளர்ப்பு யானை பத்மநாபன் நினைவு நாள் நாளை அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: