ஜபுவாவில் மதியம் 12.40 மணியளவில் பல வளர்ச்சி பணிகளுக்கான தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதில், பழங்குடி பெண் பயனாளிகள், உணவு மானியத்திற்கான மாத தவணை தொகையை பெறும் வாய்ப்பு கிடைக்க பெறுவார்கள் என தெரிவித்து உள்ளார்.அவருடைய இந்த பயணத்தில், நீர் விநியோகம் மற்றும் குடிநீர் வழங்குவதற்கான பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டவுள்ளார். ரெயில் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்களின் பயண நேரம் குறையும் வகையிலான திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதன்படி, மத்திய பிரதேசத்தில் மொத்தம் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
The post மத்திய பிரதேசத்தில் ரூ.7,300 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.