இந்த நிலத்தை வகை மாற்றம் செய்ய முடியாது. இதுகுறித்து மனுதார் கடந்த 2022ல் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பிலிருந்து இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மனுதாரர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்றுள்ள ஆவணங்களின்படி மனுதாரர் குறிப்பிடும் நிலம் பஞ்சமி நிலம் என்பது தெளிவாகிறது. இந்த நிலத்தை வகை மாற்றம் செய்ய அரசுக்கும் அதிகாரம் இல்லை. எனவே, மனுதாரர் குறிப்பிட்டுள்ள பஞ்சமி நிலத்தை பயன்படுத்திவரும் நபர்களிடம் இருந்து மீட்க வேண்டும். அந்த நிலத்திற்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். அந்த நிலத்தை வருவாய் பதிவேடு ஆவணங்களில் பஞ்சமி நிலம் என்று பதிவு செய்து தகுதியான நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
The post பட்டியலின மக்கள் அல்லாதோருக்கு விற்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டு தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.