பாஜவினர் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி


காஞ்சிபுரம்: பாஜவினரின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லை என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் தர்காவில் அமைச்சர் செஞ்சு மஸ்தான் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும், நடைபயணம் மேற்கொள்ளும் பாஜ தலைவர் அண்ணாமலைக்கு பேனர் வைத்து வரவேற்கும் நபர்களின் படங்களை பார்த்தால், பெரும்பாலானோர் நீண்டகாலமாக காவல்துறையில் பட்டியலில் இருந்து வரும் குற்றவாளிகள்தான். மேலும், அவர்கள் பேசும் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே கிடையாது.

அரசியலில் பேசக்கூடியதாக இருந்தாலும், அளவு கடந்த மோசடித்தனமாக பேசக்கூடிய மோடி அரசின் அடிப்படை தத்துவமாக உள்ளது. காலம் நிச்சியம் பதில் சொல்லும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும். இந்நியாவை காப்போம், ஜனநாயகத்தை காப்போம், தமிழக உரிமைகளை மீட்டெடுப்போம். என்ஐஏ சோதனையில் தவறு இருப்பதாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. அச்சுறுத்தும் வகையில் சோதனை நடைபெறுகிறது. தவறுகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

The post பாஜவினர் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: