இந்த நிலையில் 7ம் நாளான இன்று விபத்து நடந்த இடத்தில் வெற்றி துரைசாமி போல் உருவம் கொண்ட பொம்மையை ஆற்றில் வீசி நேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விபத்து எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக அவரைப் போல DEMO பொம்மையை ஆற்றில் வீசி, விபத்து நடந்தபின் உடல் எவ்வழியாக நதியில் சென்றிருக்கும் என மீட்புக் குழுவினர் நிகழ்த்திக்காட்டி உள்ளனர். ஸ்பா டைவிங் வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினருடன் 100-க்கும் மேற்பட்டோர் நேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த டி.என்.ஏ. சோதனை முடிவுகள் வெளிவர வாய்ப்பு என கின்னூர் மாவட்ட ஆட்சியர் அமித்குமார் சர்மா தந்தி டிவிக்கு தகவல் அளித்துள்ளார்.
The post 7வது நாளாக வெற்றி துரைசாமியை தேடுதல் பணி.. உருவ பொம்மையை ஆற்றில் வீசி உடல் எவ்வழியாக சென்றிருக்கும் என ஆய்வு appeared first on Dinakaran.