வெளிநாட்டு முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப் பயணமாக ஸ்பெயினுக்குச் சென்ற திமுக அரசின் முதல்வர் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டதாகவும், முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேசியதாகவும், இதையடுத்து பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாகபேட்டி அளித்துள்ளார்.

ஸ்பெயின் பயணத்தினால் தமிழகத்திற்கு மூன்று நிறுவனங்கள் மூலம் 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

The post வெளிநாட்டு முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: