திருத்துறைப்பூண்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

 

திருத்துறைப்பூண்டி, பிப். 8: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் 15-1 – 2024-14 -2 – 24 வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலக்கொருக்கை சாய் நிவாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 50 மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் அசோக்குமார், பள்ளியின் தாளாளர் கிருஷ்ணகுமார், முதல்வர் ஈஸ்வரி கலந்து கொண்டனர்

 

The post திருத்துறைப்பூண்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா appeared first on Dinakaran.

Related Stories: