ஆவடியில் பெண் காவலர்கள் உடற்தகுதி தேர்வு

ஆவடி: ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி கவாத்து மைதானத்தில் பெண் காவலர் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத் துறை மற்றும் சிறைக் காவலர் பணிகளுக்கான தேர்வு ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி கவாத்து மைதானத்தில் நேற்று தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், சான்றிதழ் சரிபார்ப்பு, 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், உயர அளவிடுதல், பந்து எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் என பல்வேறு தேர்வு நடந்தது. இதில் 360 தேர்வாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 210 பேர் தகுதி பெற்று வெற்றி பெற்றனர். இந்த தேர்வு ஆவடி காவல் ஆணையர் சங்கர் மேற்பார்வையில், துணை ஆணையர் பெருமாள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

The post ஆவடியில் பெண் காவலர்கள் உடற்தகுதி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: