ஆயுள் கைதி தண்டனை விடுதலை வேலூர் மத்திய சிறையிலிருந்து

வேலூர், பிப்.6: வேலூர் மத்திய சிறையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த சின்னட்டி கிராமத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி சீனிவாசன் (55), இவர் கடந்த 17 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்து வந்தார். இந்நிலையில் முன்னாள் அண்ணாவின் 115வது பிறந்த நாள் முன்னிட்டு நன்னடதை அடிப்படையில் நேற்று அவரை முன் விடுதலை செய்யப்பட்டனர். அவருக்கு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் மளிகை பொருட்கள் அரிசி பருப்பு, புளி கடலை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் சங்கத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான டி.எம்.விஜயராகவலு, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆயுள் கைதி தண்டனை விடுதலை வேலூர் மத்திய சிறையிலிருந்து appeared first on Dinakaran.

Related Stories: