அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட கால கைதிகள் 12 பேர் விடுதலை அரசாணை வெளியீடு

சென்னை: அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் 12 சிறை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசின் பரிந்துரைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கடலூர் சிறையில் நீண்ட காலமாக இருக்கும் செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் (எ) உக்கிரவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோவை சிறையில் உள்ள அபுதாஹீர் (எ) அபு, விஸ்வநாதன் (எ) விஜயன், கமல் (எ) பூரி கமல், ஹரூண் பாட்ஷா (எ) ஹரூண், சாகுல் அமீது, பாபு (எ)ஊமையில் பாபு ஆகியோர் விடுதலை செய்யப்படுகின்றனர். அதைப்போன்று வேலூர் மத்திய சிறையில் இருக்கும் ஸ்ரீனிவாசன், சென்னை புழல் மத்திய சிறையில் இருக்கும் ஜாஹீர் (எ) குண்டு ஜாஹீர் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

The post அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட கால கைதிகள் 12 பேர் விடுதலை அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: